articles

தியாகச் சரித்திரம் படைத்த தலைவர்!

இந்திய விடுதலைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், விவசாயிகள், தொழிலா ளர்கள் நலனுக்கான போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரம் அடைந்தேன்.

13.11.2023 அன்று மருத்துவ மனையில் அவரை சந்தித்து தோழர்களிடமும், குடும்பத்தினர்களி டமும் நலன் விசாரித்தபோது, எப்படியும் அவர் பிழைத்துக் கொள்வார். நீண்ட காலம் நம்மோடு வாழ்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் மாணவராக அவர் விளங்கிய போது, ஆதிக்க இந்தியை எதிர்த்துக் களமாடினார். தொடர்ந்து மதுரையில் உருவான மாணவர் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்று மொழிக்காகவும், நாட்டுக்காகவும் தொடர்ந்து போராடினார்.

1941-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா மலைப் பல்கலைக் கழக மாணவர்க ளுக்கு ஆதரவாக அமெரிக்கன் கல்லூரியில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது படிப்பு தொடர முடியாமல் போனது.

கம்யூனிஸ்ட் கட்சியில் தொடக்க காலம் முதலே தொண்டாற்றிய சங்கரய்யா அவர்கள் கட்சி தடை செய்யப்பட்டபோது இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டு கட்சிப் பணியாற்றினார். எட்டு ஆண்டு காலம் தன் பொது வாழ்க்கையில் சிறையில் அடக்கு முறைக்கு ஆளாகி தியாகச் சரித்திரம் படைத்தவர் சங்கரய்யா.

2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியபோது, விருதுடன் சேர்த்து வழங்கிய பத்து லட்சம் ரூபாய் நிதியினை முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு வழங்கினார் சங்கரய்யா. இதனைப்போலவே 1972 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான  நிதியை அரசு வழங்கியபோது, ‘நாட்டு விடு தலைக்காக நாங்கள் போராடினோம். பென்சன் தொகைக்காக அல்ல’ என்று குறிப்பிட்டு அதனையும் அரசுக்கே திருப்பி வழங்கினார்.

இத்தகைய பல்வேறு சிறப்புக்க ளின் கொள்கலனாக திகழ்ந்த பெரு மைக்குரிய இலட்சியப் போராளியான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். 

வைகோ, 
பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.